திங்கள், 13 ஜூலை, 2009

பழகு மொழி - 02

(1):1:1 உயிரெழுத்துகளும் அவற்றின் தனித் தன்மைகளும்

உயிரெழுத்துகளை நான்கு வகைப் படுத்துவர்:

  1. குற்றெழுத்து(குறில்),
  2. நெட்டெழுத்து(நெடில்),
  3. சுட்டெழுத்து,
  4. வினாவெழுத்து.

(1):1:1:1 குற்றெழுத்து அல்லது குறில். இதன் ஒலி, ஒரு மாத்திரை கால அளவு குறுகி ஒலிப்பதால் குறில் என்றானது:

,,,, = 5 எழுத்துகள்.

ஒரு மாத்திரை கால அளவு என்பது கண் சிமிட்டும் நேரம் அல்லது கைவிரல் சொடுக்கும் நேரம் என்பர். ஒரு மாத்திரைக்கும் குறைவான கால அளவில் கண்களை மூடித் திறந்து விடலாம். அதற்காகவே, "இயல்பெழு மாந்தர் இமை நொடி மாத்திரை" என்றது நன்னூல். அஃதாவது மனிதன் இயல்பாகக் கண்களை மூடித் திறக்கும் நேரம் ஒரு மாத்திரையாம். அதுபோல், "உன்னல் காலே; ஊன்றல் அரையே; முறுக்கல் முக்கால்; விடுத்தல் ஒன்றே" எனும் சூத்திரப்படி, கட்டை விரலையும் நடுவிரலையும் சேர்க்க நினைப்பது (உன்னல்) கால் மாத்திரையாம். அவ்விரு விரல்களையும் இணைப்பது (ஊன்றுதல்) அரை மாத்திரையாம். சொடுக்குவதற்காக முறுக்குவது முக்கால் மாத்திரையாம். முறுக்கியதை விடுவது ஒரு மாத்திரையாம்.

(1):1:1:2()நெட்டெழுத்து அல்லது நெடில். இதன் ஒலி இரு மாத்திரை அளவு முழுமையாக நீண்டு ஒலிப்பதால் நெடில் என்றானது:

,,,, = 5 எழுத்துகள்.

குறிப்பு: ,ஓ ஆகிய இரண்டு எழுத்துகளும் ஒரு சொல்லின் இறுதியில் அமைந்து வினாவெழுத்தாக மாறும். "ஆ" என்பது ஓரெழுத்து ஒரு மொழி/சொல் ஆகும். "ஆ" என்றால் பசு (ஆவின் பால்).

(1):1:1:2()குறுக்கம். இதன் ஒலி ஒன்றரை மாத்திரை அளவே ஒலிப்பதால் இது குறுக்கமென்றாலும் தொல்காப்பியத்தில் நெடிலுடன் சேர்த்தே கணக்கிடப் படுகிறது: ", , , , , , ஔ என்னும் அப்பால் ஏழும் ஈரளபிசைக்கும் நெட்டெழுத்தென்ப". ஆனால், உண்மையில் ஐ,ஔ ஆகிய இரண்டும் குறுக்கமே. "மூன்று உயிர்அளபு, இரண்டா நெடில், ஒன்றே குறிலோடு '' ''க் குறுக்கம் ஒற்றளபு....." -நன்னூல். நமது பாடங்களில் இவ்விரண்டையும் குறுநெடில்/குறுக்கம் என்றே குறிப்போம்.

, = 2 எழுத்துகள்.

குறிப்பு: ஐ என்பது இரண்டாம் வேற்றுமைக்குரிய எழுத்தாகும். (அவன்+ = அவனை). ஐ எனும் எழுத்து, தனித்து ஒலிக்கும்போது இரண்டு மாத்திரை; ஒரு சொல்லின் தொடக்கத்தில் ஒன்றரை மாத்திரை; நடுவில்/இறுதியில் ஒரு மாத்திரை அளவுகளாக மூன்று வகைகளில் மாறி ஒலிக்கும். "தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம் நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்" -நன்னூல்.

காட்டுகள்: தனித்த = இரண்டு மாத்திரை

சொல்லின் முதலில்: யம் = ஒன்றரை மாத்திரை

சொல்லின் நடுவில்: அலையோசை = ஒரு மாத்திரை

சொல்லின் இறுதியில்: மலை = ஒரு மாத்திரை

(1):1:1:3 சுட்டெழுத்து. சொல்லின் முதலெழுத்தாக அமைந்து, ஒன்றைச் சுட்டிக் காட்டும் ஓரெழுத்து, சுட்டெழுத்தாகும்.

,, = 3 எழுத்துகள்

காட்டுகள்: +சொல்=அச்சொல்; +பாடம்=இப்பாடம்; +பக்கம்=உப்பக்கம்.

'உப்பக்கம்' என்பது இப்போது வழக்கில் இல்லாத சொல்லாகும். 'பின்பக்கம்' என்பது அதன் பொருளாகும்.

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்" என்று குறள் (620) கூறுகிறது. அதன் பொருள், தளராத முயற்சியை உடையோர் விதியையும் (உப்பக்கம்=)புறமுதுகிடச் செய்வர்" என்பதாகும்.

(1):1:1:4 வினாவெழுத்து. ஒரு சொல்லின் இறுதி எழுத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு வினாவை எழுப்புவது வினாவெழுத்தாகும்.

, = 2 எழுத்துகள்

காட்டுகள்: வருவான்+ = வருவானா?

வருகின்றான்+ = வருகின்றானா?

வந்தான்+ = வந்தானா?

தருவான்+ = தருவானோ?

மாட்டான்+ = மாட்டானோ?

*********************************

கடந்த வாரச் சொற்றொடர் பற்றிய விளக்கம்:

'என்ற', 'எனும்' ஆகிய சொற்களை முறையே இறந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் பயன் படுத்த வேண்டும்.

பிழையான சொற்றொடர்: "தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்".

"தஞ்சாவூர் என்ற ஊர்" என்று எழுதினால் அவ்வூர் இப்போது இல்லை என்றாகும். அதுபோலவே, "அருண்மொழி எனும்" என்று எழுதினால் அவன் இப்போது உயிருடன் இருக்கிறான் என்றாகும்.

சரியான சொற்றொடர்: "தஞ்சாவூர் எனும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி என்ற இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்".

இக்கட்டுரையைத் தொடர்ந்து கருத்தூன்றிப் படித்து வந்தால் சரியான, சிறந்த சொற்றொடர்களை எழுத முடியும்.

வாசகர்களுக்கான இவ்வாரக் கேள்வி:

"மழை நீர் உயிர் நீர்; மழை நீரை சேமிப்போம்"என்ற விளம்பரத்தில் உள்ள பிழை என்ன? காரணத்துடன் விளக்குக!

உதவி : சரியான விடை தருவதற்கு இப்பாடத்தில் உதவி ஒளிந்திருக்கிறது.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: